தூக்கமே வருவதில்லை...
அப்படியே வந்தாலும்
தூக்கத்தில்
சிரிக்கிறேன்
என்கிறார்கள் தோழிகள்....
கனவுகளிலும்
உன்
ஞாபகம்தான்...
பசிக்கிறது....
ஆனால் எதுவும் சாப்பிட பிடிக்க
வில்லை...
தட்டில் கை அலை பாய்கிறது...
படிக்கும் போதும்,
எழுதும்
போதும்,
குளிக்கும் போதும்
பயணிக்கும் போதும்,
எப்போதும் உன்
ஞாபகம்தான்..
கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம்
என்னில் உன்னை
பார்க்கிறேன்...
ஆதலால் கண்ணாடியைப் பார்த்து
பேசிக்
கொண்டிருக்கிறேன்
உன்னிடம் பேசுவதாய் நினைத்து....
தோழிகளுடன் உரையாடும்
போதும்
திடீர் திடீரென
உன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து
விடுவதால்
தடங்கலிடும் விவாதங்களால்,
விவாதப் பொருளாகிறேன்
நான்...
என் செல்பேசியில் வரும்
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
உன்னையே
ஞாபகப் படுத்துவதால்
செல்பேசிக்கு கிடைக்கின்றன கூடுதல் முத்தங்கள்...
கூடவே
அலுவலக தோழிகளின் வியப்பு பார்வைகள்...
தினமும் முன்செலுத்தப்படும்
மின்னஞ்சல்களில்
எங்காவது உன் பெயர் இருந்தால்,
அதற்காகவே
சேமிக்கப்படுகின்றன
அவ்வஞ்சல்கள், என் கணிணியில்...
குளித்துவிட்டு உடல்
துடைக்காமல்
ஆடையணிந்து அலுவலகம் கிளம்பும்
சம்பவங்கள்
அடிக்கடி
நிகழ்கின்றன...
உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??