என்னை அழவைத்த பெண்ணே உன்னை அள்ளியனைக்க துடிக்குது என்கரம்!
உன் நினைவுக் கீற்றுக்கள்-என் மனதில் புயலாக -எழுகிறது இருந்தாலும்-என்னை அழவைத்து அழவைத்து-என்னை, ஏன் துடியாய் -துடிக்கவைக்கிறாய் உன் நினைவுகள்-என் மனக்கதவுகளில் பூட்டப்பட வில்லை எப்போதும் திறக்கப்பட்டிருக்கிறது,
ஆனால் உன்மனதில், என் நினைவுகதவுகள், பூட்டப்பட்டது -ஏன் சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே,
சில நேரங்களில்- உன்னை என் மனக்கதவுகள் நினைக்க-மறுத்தாலும், நான் கை பிடித்து எழுதும்-பேனா கண்ணீர் துளியை -விட்டு விட்டு உன் ஞாபக அலைகளை காகிதத்தை-நனைக்க வைக்குது, நான் உனக்காக, காதல் மடல் எழுதமறுத்தாலும், அந்த பேனா -மறக்கமாட்டாது, அது எப்போதும் உன்-நினைவுக் காற்றை வீசிக் கொன்டே -இருக்கும், ஏன் பெண்ணே -என்னை, அழவைத்து அழவைத்து, அழகு பார்கிறாய், இது உனக்கு -அழகா, சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே
சிலமாதங்கள் சில வருடங்கள் கடந்த நிலையில் என் மனதுக்குள் காதல் -என்னும் பாச உணர்வை -நீ சுவைக்க வைத்துவிட்டாய், நீ என்னை அழவைத்த -ஒவ்வொரு நிமிடங்களில், என் மனதுக்குள் புயல் அடித்தது, என் மன உணர்வுகள் -மரணத்தில் சாய்ந்தது நிலவு கூட தேய்ந்து-சில நாட்களில் அது-முழுமை பெறும் ஆனால்என்னை அழவைத்துவிட்டாய்-பெண்ணே உன்னை அள்ளியணைக்க என்கரம் -தழுவுதே,
No comments:
Post a Comment